ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே - Jeeva vasanam kooruvom sagotharare

ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே

சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்

பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த

ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே

பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்

பட்டு மடியும் வேளையில்

பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து

வேதனை தானடையப் போவோர் கதி பெறவே

காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு

கர்த்தன் சேவையில் அமர்ந்தே

நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த

நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய

பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்

போகச் சொல்லி விதித்தாரே

காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற

கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து

விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை

மீட்கக் குருசில் இறந்தார்

மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்

றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு